மணலி புதுநகரில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல்".. மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி உற்சாகம்..!
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் என்ற பெயரில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பெண்கள், மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பொங்கல் பரிமாறப்பட்டது.
மேலும், கோலப் போட்டிகள் நடத்தப்பட்டதோடு, பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.
Comments